‘முன்பெல்லாம் மனசுக்கு வேதனை தரும் ஒரு சம்பவம் நடைபெற்றால், அதை யாரிடத்தில் பரிமாறிக் கொள்வது, மனசை ஆசுவாசப்படுத்திக் கொள்வது எப்படி என்பது, மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும்.

‘தற்போது அப்படி அல்ல. ஏதாவது வேதனை தரும் பிரச்சினை நடந்தால், உடனே தோழியரின் மொபைல் எண்ணை அழுத்தி, அதை அவர்களிடம் பகிர்ந்து, பிரச்னைக்கு ஒரு தீர்வையும், ஆறுதலையும் ஏற்படுத்திக் கொள்கிறேன்.

‘அந்த வகையில், எனக்கு தற்போது மொபைல் போன் தான், ஈடு இணையற்ற மிகச்சிறந்த தோழியாக இருக்கிறது.

யாரையும் தேடிச் செல்லாமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே, என் பிரச்னைகளுக்கு ஆலோசனை மற்றும் ஆறுதல் தேடிக் கொள்ளவும் மொபைல் போன் பயன்படுகிறது…’ என்கிறார், நடிகை சாய் பல்லவி.