BIGG BOSS தமிழ் 6-வது சீசன் கடந்த ஒக்டோபர் 9-ஆம் திகதி  கோலாகலமாக தொடங்கி பல டாஸ்க்குகள் பல்வேறு திருப்பங்கள் என பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் முதல் நபராக சாந்தி என்பவர்  எலிமினேட் செய்யப்பட்டார்.

 பின்னர் ஜி.பி.முத்து தாமாக முன் வந்து வெளியேறினார்.

 தொடர்ந்து இரண்டாவது நபராக கடந்த வாரம் அசல் எலிமினேட் செய்யப்பட்டார்.

 தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

 இப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் BIGG BOSS  இன்றுடன் 22 நாட்களை நெருங்கியுள்ளது. 

இதனிடையே சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் BIGG BOSS  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வந்தது.

 ஆனால், BIGG BOSS  நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். 

அப்படி கலந்து கொள்வதாக இருந்தால், நான் தான் BIGG BOSS ஆக இருப்பேன் என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார்.

 மேலும் BIGG BOSS நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சியாகத் தான் BIGG BOSS ஐ நடத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்