லங்கா சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று (24) முதல் நீக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச கம்பனி லிமிடெட் அறிவித்துள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை வரம்புகள் இன்றி எந்த அளவிலும் கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச மேலும் தெரிவித்துள்ளது.