Greymouth, Tainui தெருவில் நள்ளிரவில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவு 12.40 மணியளவில் ஒரு சர்வீஸ் ஸ்டேஷனுக்குள் கொள்ளையர்கள் திருடப்பட்ட காரை பயன்படுத்தி உள்ளே நுழைந்து திருட முயற்சித்தனர்.

பின்னர் சிறிய அளவு பணம் மற்றும் சில உணவுப் பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.

இந்நிலையில் சேவை நிலையத்திற்கும், திருட பயன்படுத்தப்பட்ட காருக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்ட போதிலும், உரிய தகவல்களை யாரிடமிருந்தும் கேட்க விரும்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.