கிறிஸ்ட்சர்சில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு மாதம் தலைமறைவாக இருந்த "மிகவும் ஆபத்தானவர்" என்று முத்திரை குத்தப்பட்ட நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹென்ட்ரிக்ஸ் ராவிரி ஜூரி என்ற 27 வயதான குறித்த நபர் ஹேஸ்டிங்ஸில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் கைது செய்யப்பட்டார்.

அவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு நாளை ஹேஸ்டிங்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

ஆகஸ்ட் 30, செவ்வாய்க் கிழமை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹியர்ஃபோர்டில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக அவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.