நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இசைஞானி இளையராஜா மற்றும் பல பின்னணி பாடகர்கள் கலந்து கொள்ளும்  ‘இசை இராஜாங்கம்’ Live in Concert நிகழ்ச்சி கடந்த மாதம் 24ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அன்றைய நிகழ்ச்சி நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்குமுன் தொழிநுட்ப ஒழுங்கமைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு ,காரணம் எதுவும் குறிப்பிடாமல், ஒழுங்கமைப்பாளர்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாது நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ‘இசை இராஜாங்கம்’ நிகழ்ச்சி மீண்டும் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளனர். 

இந்த நிகழ்வானது மீண்டும் நியூஸிலாந்து மக்களை ஏமாற்றும் ஒரு செயலா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.