Kaitaia விற்கு வருகை தருபவர்களை
வரவேற்கும் பெரிய மவோரி செதுக்கல் ஒன்று நேற்று சேதப்படுத்தப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த செதுக்கல் தூணின் உச்சிப் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் 61 வயதான உள்ளூர் நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அவர் நாளை Kaitaia மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

அதை செதுக்க உதவிய பென்ஜாய் கிரிகோரி என்பவர் இந்த சேதம் குறித்து கோபமடைந்ததாக நேற்று கூறினார்.

"நான் அந்த நேரத்தில் ஆக்லாந்தில் இருந்தேன், நான் மிகவும் கோபமடைந்தேன், மிகவும் வருத்தப்பட்டேன், இறுதியில் நான் உடைந்து போனேன்," என்று அவர் கூறினார்.

Kaitaia வை அழகுபடுத்தும் 7 மில்லியன் டொலர் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செதுக்கல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.