லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரம் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழந்துள்ளார், இந்த செய்தி மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது.

 

இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதற்கான சான்றிதழை அந்நாட்டு அரசு வழங்கியுள்ள நிலையில் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 

தற்போது லொஸ்லியா இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் விடுதியொன்றில் தனிமைப்படுத்தலில் இருக்கின்றார்.

 

இந்நிலையில் இன்றையதினம் (24) அவர் மயங்கி விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

 

தந்தையிறந்த சோகத்தில் தொடர்ந்து மன அழுத்தத்திற்குள்ளாகி சரியாக சாப்பிடாமல், இருந்ததால் பலவீனம் அடைந்து இவ்வாறு மயக்கமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ,இந்த சம்பவங்கள் தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.