நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டம் கட்டமாக திறக்கப்பட்டன.

இந்நிலையில், நாட்டின் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும்,  கொழும்பு மாவட்டத்தில் உள்ள 492 பாடசாலைகளில் 412 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.