மலர்ச்சாலை உரிமையாளர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய - மித்தெனிய வீதியின் தோரகொலயாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று முற்பகல் 9.30 மணியளவில் மலர்ச்சாலையைத் திறப்பதற்காக உரிமையாளர் சென்ற வேளையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.