இன்று பிற்பகல் Mount Maunganui அருகே மாநில நெடுஞ்சாலை 29A இல் பல வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

விபத்தைத் தொடர்ந்து மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இருவர் மிதமான நிலையில் இருப்பதாகவும் செயின்ட் ஜான் அவசர சேவைகள் தெரிவித்துள்ளது. 

நான்கு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் Tauranga மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிற்பகல் 3 மணியளவில் விபத்து குறித்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாகவும், தற்போது அப்பகுதியில் பெரும் போக்குவரத்து தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முடிந்தால் அந்தப் பகுதியைத் தவிர்க்கவும், குறிப்பிடத்தக்க தாமதங்களை எதிர்பார்க்கவும் வாகன ஓட்டுநர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என Waka Kotahi தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது‌.