நேற்று பிற்பகல் கிறிட்சர்ச், Sockburn இல் ஒரு பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்ததைத் தொடர்ந்து கிறிஸ்ட்சர்ச் பொலிசார் இரண்டு பேரை கைது செய்தனர்.

மாலை 4.20 மணியளவில் Cheyenne தெருவில் கத்தியால் குத்தப்பட்டு, படுகாயமடைந்த ஒரு பெண்ணை மீட்பதற்காக ‌அவசர சேவைகள் வந்தடைந்தன.

உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது, ஆனால் சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து இரண்டு பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அந்தப் பெண் காயமடைந்த நேரத்தில் Cheyenne தெரு பகுதியில் இருந்தவர்கள் மற்றும் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் பொலிஸைத் தொடர்புகொண்டு கோப்பு எண் P051030807ஐக் மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.