மாத்தறை ரயில் நிலையத்தில் நேற்று  இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த சாகரிகா ரயிலில் குறித்த இளைஞர் ஏற முற்பட்டபோது ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் வீழ்ந்துள்ளார்.

அங்கு சிக்கிய இளைஞரை வெளியே எடுப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் சென்றுள்ளது. இருப்பினும் குறித்த இளைஞரை உயிருடன் மீட்க முடியவில்லை.

உயிரிழந்தவர் திக்வெல்ல வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த ருசர விதானகே (23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.