எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றி  தகவல்களுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளம் செயலிழக்கப்பட்டுள்ளது.

அதிகாரசபையின் அறிவுறுத்தலின் பேரில் தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று அந்த தளத்திற்கான அணுகல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் மற்றும் எரிபொருள் இருப்புக்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காக இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.