Tauranga வில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Matapihi உள்ள மாநில நெடுஞ்சாலை 29A இல் நேற்று இரவு 11 மணிக்குப் பின்னர் இரண்டு கார் விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் குறித்த விபத்தில் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தை அடுத்து அதிகாலை 4 மணி வரை வீதி மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.