இன்று காலை Manawatū நகரமான Levin இல் உள்ள சிறையில் இருந்து 41 வயதான மார்லி கிரிகோரி என்ற கைதி காவலில் இருந்து தப்பிச் சென்றார்.

இன்று காலை அவர் Levin சிறையில் இருந்து Palmerston மாவட்ட நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக ஒரு அறிக்கையில் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கிரிகோரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்

அவர் கடைசியாக செருப்புகள் அணியாத கால்களுடன் சாம்பல் நிற ஆடை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் ஆபத்தானவராக கருதப்படுகிறார், அவரை அணுகக்கூடாது என்று பொலிஸார் கூறுகிறார்கள்.

கிரிகோரியைப் பார்க்கும் எவரும் 111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு 220618/3121 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.