கிறிஸ்ட்சர்ச்சில் புதிதாக கட்டப்பட்ட பள்ளியின் திறப்பு விழா நிகழ்வில் பிரதமர் ஜெசிந்தா ஆடர்னின் கலந்து கொண்டார்.

இதன்போது செல்ஃபி எடுக்க மாணவர்கள் பிரதமர் ஆர்டெர்னை கும்பல் கும்பலாக சூழ்ந்து கொண்டனர்.

பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கிறிஸ்ட்சர்ச்சில் மீள் கட்டமைப்பு செய்யப்பட்ட Te Aratai கல்லூரியை அதிகாரப்பூர்வமாக இன்று திறந்து வைத்தார்.

இதன்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே பல எதிர்ப்பாளர்கள் கூடியிருந்தனர்.

எனவே பிரதமர் ஆர்டெர்ன் அவர்களைத் தவிர்க்க வேறு ஒரு நுழைவாயிலைப் பயன்படுத்தினார்.

ஊடகங்களிடம் பேசிய பிரதமர்..

பள்ளி மாணவர்களின் புத்தம் புதிய பள்ளியை திறப்பது உற்சாகமாக உள்ளது," என்று அவர் கூறினார்.

மேலும் பள்ளிக்கு வெளியே எதிர்ப்பாளர்கள் எதற்கு எதிராக பிரச்சாரம் செய்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை‌ என அவர் தெரிவித்தார்.