73 ஆவது சுதந்திர தின வைபவத்திற்கு அமைவாக சுதந்திர சதுக்கம், சுதந்திர மாவத்தை ஆகிய பகுதிகளில் விசேட வாகன திட்டம் தொடர்பிலான ஒத்திகை நடைபெறுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும்,கடந்த 30 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 3 ஆம் திகதி வரையில் இடம்பெறும் இந்த சுதந்திர தின வைபவ ஒத்திகையின் காரணமாக காலை 6.00 மணி தொடக்கம் நண்பகல் 01.00 மணி வரையில் இந்த விசேட வாகன திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சுதந்திர தினத்திற்கு அமைவாக இடம்பெறும் வீதி சிரமங்கள் தொடர்பாக அறிவிப்பதற்கு அல்லது மாற்று வீதி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக 0112 433333 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸ் வாகன போக்குவரத்து தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.