நயன்தாரா தன் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை ஜூன் 9ம் திகதி திருமணம் செய்து கொள்கிறார்.

அவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கிறது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழ் அளித்தார்கள்.

மேலும் ஸ்டாலினுக்கு சூர்யகாந்தி பூங்கொத்து கொடுத்தார்கள்.

அப்பொழுது உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஜூன் 8ம் திகதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

அதில் அஜித்தும், விஜய்யும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல காலம் கழித்து தல, தளபதியை ஒரே இடத்தில் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தன் குடும்பத்துடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது