தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை கீர்த்தி சுரேஷ், தான் நடித்த படங்களை தானே பார்ப்பதில்லை என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிஸியாக உள்ள இவர், சமீபத்தில் சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்தார்.

இந்த படம் ஓடிடியில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது.

தொடர்ந்து தற்போது இவர் மாமன்னன், போலோ சங்கர், தசரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய நடிப்பு எனக்கு முழு திருப்தி அளிப்பதில்லை என்றும், இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன் என பேசியுள்ளார்.

இதுபோக தான் நடிக்கும் பெரும்பாலான படங்களை தானே பார்ப்பதில்லை என்றும், அப்படிப் பார்த்தால் என்னுடைய தவறு எனது கண்களுக்கு தெரியும், அடுத்த படத்தில் இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என தோன்றும், அதனால் அதை தவிர்த்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.

உங்க படத்தை நீங்களே பார்க்க மாட்டீங்களா என ரசிகர்கள் இவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.