பிரிட்டன் நாட்டில் இந்த வாரம் இரத்த மழை என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்வதுடன், இடி மின்னலுடன் கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த இரத்த மழை என்பது, அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும் போது உருவாகுவதாகும்.

எனவே மழை பெய்யும் போது சிவப்பு நிறத்தில் நீர்த்துளிகள் விழுவதைக் காண முடியும்.

லண்டன் மற்றும் தென் கிழக்கு பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை தொடர்பாக நேற்று காலை வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அங்கு மக்கள் கடும் வெயிலால் தவித்த நிலையில், தற்போது திடீரென வானிலை மாறி மழை பொழியும் நிலை உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.