கிறிஸ்ட்சர்ச் மற்றும் ஆக்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தெற்கு ஆக்லாந்தில் Red Hill இல் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு சுமார் 7.45 மணியளவில் Brooke சாலையில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில் அதிகாரிகள் இன்று குறித்த வீட்டை ஆய்வு செய்கின்றனர்.

இதற்கிடையில், கிறிஸ்ட்சர்ச் புறநகர் பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது இரவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Mairehau இல் Akaroa தெரு மற்றும் நியூ பிரைட்டனில் உள்ள Estuary வீதி ஆகிய இடங்களில் நடந்த குறித்த துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை மற்றும் இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தாங்கள் நினைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.