ஆக்லாந்தில் நள்ளிரவில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு North Shore இல் உள்ள Greenhithe இல் ஒரு வணிக நிலையத்தில் திருடர்கள் காரால் உடைத்து சிகரெட் மற்றும் மதுபானங்களை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து Massey உள்ள Don Buck சாலையில் சாலைத் தடுப்புக்களை பயன்படுத்தி அதிகாரிகள் குறித்த குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதனிடையே இன்று அதிகாலை Onehunga வில் உள்ள Onehunga மாலில் உள்ள ஒரு வணிக நிலையத்திற்குள் கார் ஒன்று புகுந்தது.

இந்த சம்பவத்தில் எந்த பொருட்களும் திருடப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.