ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த உலகளாவிய சக்திகள் பலவேறு வகையில் முயற்சி செய்து வரும் வேளையில், முன்னாள் ஆபாச நட்சத்திரம்  ஒருவர் புடினுக்கு புதுமையான ஒரு ஆபரை வழங்கியுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தப்பட வேண்டும் என உலகம் முழுவதிலும் இருந்து பல வகையில் முறையீடுகள் வைக்கப்படுகின்றன.

இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை நிறுத்தினால்,  அவருடன் ஒர் இரவைக் கழிக்க தான் தயார் என முன்னாள் ஆபாச நட்சத்திரம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கு ஈடாக தான் அவருடம் ஓர் இரவை கழிக்க தயார் என  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இத்தாலியின் முன்னாள் ஆபாச நட்சத்திரமான சியோலினா கூறியுள்ளார்.

70 வயதான முன்னாள் ஆபாச நட்சத்திரமான சியோலினாவின் உண்மையான பெயர் இலோனா ஸ்டெல்லர். ஆபாச படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் அதில் இருந்து விலகி‌ இத்தாலிய அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இவர் இத்தாலியின் முன்னாள் எம்.பியும் ஆவார்.

தற்போது அவர் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கின்ற நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பகிர்ந்துள்ள அவர், போரை நிறுத்தினால் புடினுடன் ஓர் இரவைக் கழிக்க முன்வந்துள்ளார்.

போரை நிறுத்த இதுபோன்ற சலுகைகளை வழங்க முன்வந்துள்ள சியோலினா இவ்வாறு செய்வது முதல் தடவை அல்ல.

முன்னதாக, வளைகுடாப் போரின் தொடக்கத்தில், ஈராக் தலைவர் சதாம் உசேனிடமும் இதே போன்று கூறினார்.

போரை நிறுத்தவும் அமைதியை மீட்டெடுக்கவும் தான் இப்படியொரு ஆபரை வழங்குவதாக சியோலினா கூறுகிறார்.