தரணகியில் காலாவதியான கொவிட் -19 தடுப்பூசிகள் 56 தரனக்கி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன, ஆனால் அவர்கள் எந்தப் பாதிப்பையும் சந்திக்கவில்லை என்று மாவட்ட சுகாதார வாரியம் கூறுகிறது.

39 குழந்தைகள் நியூ பிளைமவுத் TDHB தடுப்பூசி மையத்திலும், ஒன்பது பேர் சென்டர் சிட்டியில் உள்ள லைஃப் பார்மசியிலும், எட்டு பேர் துய் ஓராவிலும் இவ்வாறு காலாவதியான தடுப்பூசி டோஸைப் பெற்றுள்ளனர்.

ஏப்ரல் 6 ஆம் திகதி காலாவதியான தடுப்பூசிகளின் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டதும், அனைத்து தளங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது, பின்னர் அனைத்து தடுப்பூசிகளும் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டன.

இந்நிலையில் 36 குழந்தைகள் 48 மணிநேரம் காலாவதியான தடுப்பூசியைப் பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை அல்லது தீங்கு விளைவிக்கும் அபாயம் இல்லை என்று DHB கூறியது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரையும் தொடர்பு கொள்ளவும், மன்னிப்பு கேட்கவும் TDHB நடவடிக்கை எடுத்தது. இந்த பிழை ஏற்பட்டிருக்கக்கூடாது, மேலும் நாங்கள் எங்களுடைய பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறோம்‌ என அது தெரிவித்தது.

"எங்கள் குழந்தைகளை கொவிட்-19 வைரஸிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் மிகவும் முக்கியமானது மற்றும் இன்றுவரை 8000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் நம் நாட்டில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் தடுப்பூசி தரவுத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வு திட்டத்தில் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்று அறியப்பட்டுள்ளது.