இன்று அதிகாலை ஒரு வழக்கமான வாகனம் நிறுத்தத்தின் போது ஒரு நபர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதையடுத்து Taupō வனப்பகுதியில் பொலிஸார் தீவிர தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.

Tauhara வனப்பகுதியில் உள்ள போடோ பள்ளத்தாக்கு Poeto Valley சாலையில் அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பே ஆஃப் பிளென்டி மாவட்ட கமாண்டர் கண்காணிப்பாளர் ஆண்டி மெக்ரிகோர் தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார்.

குறித்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், ஆயுதம் தாங்கிய காவல்துறையும் ஈகிள் ஹெலிகாப்டரும் அந்த நபரை தேடி வருகின்றன.

பொதுமக்களுக்கு ஆபத்து எதுவும் இருப்பதாக பொலிஸார் கருதவில்லை, ஆனால் காட்டின் ஒரு பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது மற்றும் மக்களை அந்த பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.