மூன்று வாரங்களுக்கு முன்பு கிஸ்போர்னைச் சேர்ந்த ஒரு பெண்ணை கொலை செய்ததாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மரியா ஸ்மித் என்ற குறித்த பெண் தனது 36வது பிறந்தநாளில் தைராவிதியில் (Tairāwhiti) சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் குறித்த மரணத்துடன் தொடர்புடைய ஆக்லாந்தில் உள்ள 36 வயதான ஆண் ஒருவரும் 30 வயதுடைய பெண்ணொருவரும் இன்று கைது செய்யப்பட்டு மரியாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மனுகாவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் மே மாதம் 6 ஆம் திகதி அன்று கிஸ்போர்னில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.