Bay of Plenty மற்றும் வைகாடோ பகுதிகளில் ஏராளமான திருட்டுகளுக்குப் பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கார் உரிமையாளர்களை காவல்துறை ஊக்குவிக்கிறது.

கார்கள் பெரும்பாலும் இளைஞர்களால் திருடப்படுகின்றன. மேலும் அவை மதுபானக் கடைகள், புறநகர் பால்பண்ணைகள் மற்றும் பெரிய சில்லறை விற்பனைக் கடைகளில் மோசமான கொள்ளைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படுவதாக Bay of Plenty காவல்துறை மாவட்ட மேலாளர் இளைஞர், சமூகம், குடும்பத் தீங்குகளை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் Phil Gillbanks கூறினார்.

இவ்வாறு கொள்ளையில் ஈடுபடும் சில குற்றவாளிகள் 12 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

காவல்துறை ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது, சந்தர்ப்பவாத திருடர்களை அவர்களால் தடுக்க முடியாது, ஆனால் வாகனத் திருட்டை தீவிரமாக விசாரிக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் பொலிஸார் உறுதிபூண்டுள்ளனர், என அவர் மேலும் தெரிவித்தார்.

"மக்கள் தங்கள் கார் திருடப்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சாலையோரம், பார்வையில் படும் தூரத்தில் அல்லது பாதுகாப்பான கார் பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தவும், அலாரம் அல்லது இம்மோபைலைசரைப் பொருத்தவும், ஸ்டீயரிங் வீல் பூட்டைப் பயன்படுத்தவும் காவல்துறை மக்களை ஊக்குவிக்கிறது.

மேலும் "பொதுமக்களின் உதவியுடன், காவல்துறை இந்த இளம் குற்றவாளிகளைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும், அதே நேரத்தில் எதிர்காலத்தில் குற்றமிழைக்காமல் சிறந்த பாதையில் அவர்களை ஆதரிக்கவும் முடியும்." என இன்ஸ்பெக்டர் Phil Gillbanks கூறினார்.