இன்று இரவு 11.59 மணி முதல், நியூசிலாந்து முழுவதும் ஆரஞ்சு நிற போக்குவரத்து விளக்கு அமைப்பிற்கு நகர்கிறது என்று கொவிட்-19 பதில் அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று பிற்பகல் உறுதிப்படுத்தினார்.

கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது உட்பட பல காரணங்களுக்காக எச்சரிக்கை நிலைகளில் மாற்றம் செய்வது நியாயமானது என்று அவர் கூறினார்.

பெப்ரவரி 24 ஆம் திகதிக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாளைக்கு 10,000 தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது இருப்பதாகவும், ஆக்லாந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் மேலும் மூன்று DHB களும் பெப்ரவரி பிற்பகுதியிலிருந்து முதல் முறையாக 100 க்கும் குறைவான நோயாளிகளைப் பதிவு செய்வதாகவும் அவர் இதன்போது கூறினார்.