ஆஸ்திரேலியர்களுக்காக நியூசிலாந்தின் எல்லை மீண்டும்  திறக்கப்பட்ட நிலையில் இன்று ஆக்லாந்து விமான நிலையத்தில் உணர்ச்சிகரமான மறுசந்திப்புகள் மற்றும் நேசத்துக்குரிய சந்திப்புகளின் அழகிய நாளாக இருந்தது.

இன்றைய தினம் (13) நாட்டின் எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் ஸகுடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முதல் முறையாக நீண்ட நாட்களின் பின்னர் உறவினர்களுடன் மீண்டும் இணைந்தனர்.

சிலர் தங்கள் அன்புக்குரியவர்களை வீட்டிற்கு வரவேற்க அதிகாலை 4 மணி முதல் காத்திருந்தனர்.

பெர்த்தில் (Perth) இருந்து புறப்பட்ட விமானம் ஆக்லாந்தில் காலை 6 மணிக்கு முதல் தரையிறங்கியது.