2019 ஆம் ஆண்டு ஹமில்டன் தோட்டத்தில் இறந்து கிடந்த ஜோசுவா டெர்ரியி என்ற நபரின் மரணம் தொடர்பாக மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி அன்று ஹமில்டனில் உள்ள நவ்டனில் (Nawton) உள்ள மேற்கு சமூக மையத்தில் உள்ள தோட்டத்தில் டெர்ரி சடலமாக மீட்கப்பட்டார்.

இதன்படி இந்த சம்பவம் தொடர்பில் ஹமில்டனைச் சேர்ந்த 24 வயதான பெண், 60 வயதான ஆண் மற்றும் Waihi ஐ சேர்ந்த 45 வயது பெண் ஆகியோர் கடத்தல் மற்றும் உள்நோக்கத்துடன் தாக்குதல் நடத்தி காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இவர்கள் ஏப்ரல் 12 ஆம் திகதி ஹமில்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

"ஜோஷின் மரணத்தில் பல ஆண்டுகளாக இந்த நபர்களை பொறுப்பேற்க காவல்துறைக்கு உதவிய சமூகம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் ஆதரவிற்காக காவல்துறை நன்றி தெரிவிக்க விரும்புகிறது" என்று காவல்துறையின் ஒரு அறிக்கை கூறியது.