நேற்றிரவு மத்திய ஆக்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய நகரின் பரபரப்பான பகுதியான Wellesley Street இல் ஒரு உள்ள முகவரியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறுகிறார்கள்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.