டோங்காவில் Vava'u தீவில் உள்ள தங்களுடைய ரிசார்ட் வீட்டில் இறந்து கிடந்த நியூசிலாந்து தம்பதிகளின் பெயர்களை டோங்கா பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் 47 வயதான பென் ராக்கி நீல் மற்றும் 49 வயதான ரோசெல் நீல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 2 ஆம் திகதி மதியம் 'Utungake கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் பொலிஸாரால் அவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக துணை பொலிஸ் கமிஷனர் டெவிடா வைலியா தெரிவித்தார்.

விசாரணையில் மின்சாரம் தாக்கியதே மரணத்திற்குக் காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைலியா கூறினார்.

இந்நிலையில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அவர்களது உடல்கள் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.