இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான 2270/19 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதோடு, அது தற்போது அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட பண்ட அதிகரிப்பு (கி.கி. இற்கு)

- அப்பிள் ரூ.100 இலிருந்து ரூ.300

- திராட்சை ரூ. 200 இலிருந்து ரூ.300

- தோடம்பழம் ரூ.125 இலிருந்து ரூ.200

- பேரீச்சம் பழம் ரூ.100 இலிருந்து ரூ.200

- யோகட், வெண்ணெய், பால் பொருட்கள் ரூ. 800, ரூ.  1,000.