இன்று பிற்பகல் வைகாடோ அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காட்சிப் பரிசோதனை நிறைவடைந்த நிலையில் அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  மாற்றுப்பாதை தற்போது நடைமுறையில் உள்ளது.

இன்று மாலை 4.45 மணியளவில், Rangiriri தெற்கே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் கணிசமான எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள்கள் உட்பட சில நபர்கள் மற்றும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு மோதல் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் வாகனத்தில் இருந்து ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது டாஷ்கேம் காட்சிகள் உள்ளவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.