கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டக்காரர்கள் முகாமிட்டிருந்த Kapiti Coast பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை Peka Peka வில் ஏற்பட்ட இந்த திடீர் மரணத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை, குறித்த மரணம் மரண விசாரணை அதிகாரியால் விசாரிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Kapiti மேயர் கே.குருநாதன் கூறுகையில், அந்த இடத்தில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் எதிர்ப்புகள் குறித்து அண்டை வீட்டார் புகார் அளித்துள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் அந்த இடத்தில் 20 முதல் 40 பேர் வரை தங்கியிருந்ததாக அவர் கூறினார்.