குறிப்பிடப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த சில தினங்களில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, அனுராதபுரம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 56 சீமெந்து விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.