கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மத்திய வெலிங்டனில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு தாக்குதலின் சாட்சிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஜனவரி 23 ஆம் திகதி அன்று அதிகாலை 4.30 மணியளவில் Cuba தெரு மற்றும் Ghuznee தெருவின் முனையில் உள்ள ஒரு சில்லறை விற்பனைக் கடைக்கு வெளியே இந்தச் சம்பவம் நடந்தது.

குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்காக வெலிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது வீட்டில் குணமடைந்து வருகிறார்.

சம்பவ இடத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து குறித்த நபர் எதிர்வரும் 27 ஆம் திகதி அன்று வெலிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை கூறுகிறது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தைப் பார்த்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையல தொடர்பு கொண்டு, 220123/3576 என்ற கோப்பு எண்ணைக் மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.