கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பழம் மற்றும் காய்கறி கடையில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை 9 மணியளவில், கிறிஸ்ட்சர்ச், Sockburn, Yaldhurst சாலையில் உள்ள க்ரோவர் டைரக்ட் மார்க்கெட்டுக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

மூன்று நபர்கள் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்து கடையை கொள்ளையடிக்க முயன்றனர் ஆனால் அவர்கள் கொள்ளையடிக்கவில்லை

இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

கொள்ளை முயற்சியைத் தொடர்ந்து, குற்றவாளிகள் வாகனத்தில் தப்பிச் சென்றனர், பின்னர் வாகனத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 111 ஐ தொடர்பு கொண்டு P049400211 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே நேற்றிரவு ஹவேராவில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன் ஜனவரி 24 அன்று ஹவேரா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.