கிறிஸ்ட்சர்ச் மற்றும் டவுரங்காவில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கிறிஸ்ட்சர்ச்சில் நேற்றிரவு ஒரு வீட்டில் 37 வயதுடைய பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து Addington புறநகரில் உள்ள Grove சாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன.

பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே இன்று காலை Tauranga துறைமுகத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

காலை 8 மணிக்கு முன்னதாக அவசர சேவைகளுக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் சிறிது நேரத்தில் கடலோர காவல்படையினரால் சடலம் மீட்கப்பட்டது.

அந்த நபரின் மரணத்திற்கான காரணத்தை பொலிஸார் கண்டறிய முயன்று வருகின்றனர்.