தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத் தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப் படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடை பெறவுள்ளது.

இந்நிலையில்,  பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சைக்கு தோற்றும் மாணவர் களுக் கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துதல், ஒழுங்கு படுத்தல், பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்து தல், குறித்த பரீட்சைகள் தொடர்பான மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித் தல், பரீட்சைகள் தொடர்பான அனுமான வினாக்களை வழங்குதல், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள் போன்றவற்றை நேரடியாக அல்லது இலத்தி ரனியல் ஊடகங் கள், அச்சு ஊடகங்கள் ஊடாக வெளியிடுதல், அவ்வாறானவற்றை வைத்திருத்தல் ஆகியன குற்றங்களாகும் என அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.