ஜனவரி 25-26 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவிருக்கும் எண்ணெய் கப்பல் இன்னும் அந்த இடத்தை விட்டு வெளியேறவில்லை என அரச முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பெற்றோலியக் கிளையின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பல பாரிய பிரச்சினைகள் எழப் போகின்றன என்றும், இது இரகசியமாக இருக்க வேண்டிய சூழ்நிலை இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

மசகு எண்ணெய் இறக்குமதியில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளுக்காக அனைத்து அதிகாரிகளும் அதிகபட்ச தியாகம் செய்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.