நாட்டில் ஒமிக்ரோன் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது சுகாதார அமைச்சின் செயல்திறன் இன்மையை வெளிப்படுத்துகின்றது என சுகாதார தொழில்சார் துறையினர் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

புதிதாக 160 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை சுகாதார அமைச்சின் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பயணிகளிற்கு சோதனைகளை  மேற்கொள்வது நாட்டிற்கு சுமையாக மாறியுள்ளது என  அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்த பலர் பாதிக்கப்பட்டிருப்பது   நாட்டிலிருந்து அவர்கள் வெளியேறும்போதே தெரியவருகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இதன் மூலம் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்ட பலர் நாட்டிற்குள் நுழைகின்றனர்  என்ற முடிவிற்கு வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் ஆனால் அரசாங்கம் நாட்டிற்குள் நுழைபவர்களை சோதனையிடுவதை நிறுத்தியுள்ளது எனவும் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்காலத்தில் மிகவும் கடினமான தனிமைப்படுத்தல் நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.