மத்துகம-கொழும்பு, களுத்துறை-கொழும்பு, அளுத்கம-கொழும்பு மற்றும் அம்பலாங்கொட-கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளை குறிவைத்து இந்த கழிவு எண்ணெய் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினரால் சாதாரண கட்டணத்தின் கீழ் நீண்ட தூரப் பிரதேசங்களுக்கு பயணிக்கும் பேருந்துகளை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, இன்று அக் கும்பலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உள்ளனர்.