சைப்ரஸ் நாட்டின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம், லிமாசோலுக்கு வடமேற்கே 111 கிமீ தொலைவில் 2 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இன்று காலை 6.37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்பட்டதாக தகவல் இல்லை.