இன்று கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று சனிக்கிழமை (08) காலை 08 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கீழ்கண்ட பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைபடும்.

கொழும்பு மாநகர சபை

தெஹிவளை - கல்கிசை மாநகர சபை

கோட்டே மாநகர சபை

கடுவலை மாநகர சபை

மஹரகம

பொரலஸ்கமுவ

கொலன்னாவ

கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேசங்கள்