அரசாங்கத்தின் நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்க முடியாத நிலையேற்பட்டால் அதனால் ஆளும் கூட்டணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
வுpசாரணைகளின் பின்னரே நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சுசில்பிரேமஜயந்த நீக்கத்திற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் நாங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் கருத்து தெரிவிப்பதுடன் ஒப்பிடக்கூடாது என தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார அவர்கள் வேறு அரசியல் குழுவை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்