அரசாங்கத்தை விமர்சிக்கும் போது ஒழுக்கமற்ற விதத்தில் நடந்துகொள்ளவேண்டாம் என அமைச்சர்களை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களும் அமைச்சர்களும் அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன்  செயற்படக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுசில்பிரேமஜயந்த அரசாங்கத்தை விமர்சித்தமை குறித்து கடும் சீற்றமடைந்திருந்த ஜனாதிபதி அரசாங்கத்திலிருந்துகொண்டே அரசாங்கத்தை விமர்சிப்பது ஒழுக்கமான செயலா என கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்த அரசாங்கமும் தனது உறுப்பினர்கள் மத்தியில் ஒழுக்கத்தை பேணவேண்டும்,பொது அரங்கில் விமர்சிப்பதன் மூலம் தீர்வை காணமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.