எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு வெடிப்பு அச்சத்தால், களிமண் அடுப்புகள் மற்றும் பானைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், இலங்கையின் மட்பாண்ட தொழில்துறை திடீர் ஏற்றத்தை சந்தித்துள்ளது.

ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பமும் மட்பாண்டத் தொழிலை நம்பியிருக்கும் இப்பாகமுவவிலுள்ள கும்புக்கெட்டே கிராமம் குறித்த விற்பனையால் தற்போது செழிப்படைந்துள்ளது.

பல ஆண்டுகளாக களிமண் அடுப்புகள் மற்றும் பானைகளுக்கு குறைந்த தேவை மற்றும் தங்கள் தயாரிப்புகளுக்கு நியாயமான விலை இல்லாததால், இந்த குடும்பங்கள் வாழ்வாதார ரீதியாக பல சவால்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளனர்.

இருப்பினும், இன்று இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் களிமண் அடுப்புகளை மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்காக கும்பகெட்டே நோக்கி வருகின்றனர்.