2022ஆம் ஆண்டுக்கான அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த வாரம் அமைச்சரவை கூடாததால், இன்று அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவைப் பத்திரங்கள் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான எஸ்.ஆர்.ஆட்டிகல இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.